சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு… கவுண்டமணிக்கு என்ன ஆச்சு?


பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திரையுலக பிரபலங்கள் குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவுவதும், பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் அதுகுறித்து விளக்கம் தருவதும் தொடர்கதை ஆகி வருகிறது. அந்தவகையில் இன்று காலையிலிருந்து பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைடுத்து கவுண்டமணி தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நடிகர் கவுண்டமணி நலமாக உள்ளார். அவர் வழக்கமான பணிகளை செய்கிறார். அடுத்த பட பணிகளில் ஆர்வமாக, தீவிரமாக இருக்கிறார். அவர் உடல்நிலை குறித்து சிலர் அடிக்கடி தவறான தகவல் பரப்புகின்றனர். அதை யாரும் நம்ப வேண்டாம்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!