நடிகை விஜயலட்சுமி மீது விடுதியின் உரிமையாளர் பரபரப்பு புகார்


பல படங்களில் நடித்து பிரபலமாகி இருக்கும் நடிகை விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கன்னட சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் தமிழில் பிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அண்மையில் இவர் தூக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் தற்போது விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களாக, விஜய லட்சுமி ஒரு தனியார் விடுதியில் தங்கி வந்துள்ளார். இதற்கான வாடகை பணம் சுமார் 3 லட்சத்தை அவர் தரவில்லை என அதன் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதை தொடர்ந்து, நடிகை விஜய லட்சுமி அந்த விடுதியின் உரிமையாளருக்கு, கொடுக்க வேண்டிய மீதி தொகையை கண்டிப்பாக தருவதாக உறுதியளித்துள்ளார்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!