திமுக எம்.எல்.ஏ. மா. சுப்பிரமணியன் மகன் அன்பழகன் கொரோனாவால் உயிரிழப்பு


சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ. மா. சுப்பிரமணியத்தின் இளையமகன் அன்பழகன் (வயது 34) கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியத்துக்கு 2 வாரங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருந்தது. அதேபோல் அவரது மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இருவரும் சிகிச்சை பெற்றனர். இந்த நிலையில் மா. சுப்பிரமணியத்தின் இளைய மகன் அன்பழகனுக்கும் கொரோனா உறுதியானது. இதனால் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அன்பழகன் இன்று உயிரிழந்தார். சென்னையில் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், அமமுக பொருளாளர் வெற்றிவேல் ஆகியோர் கொரோனாவால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!