கொரோனா தடுப்பு பணிக்கு திரும்பிய ஐ.ஏ.எஸ். அதிகாரி.. குழந்தை பெற்ற 14 நாட்களில் நெகிழ்ச்சி..!


உத்தர பிரதேசத்தில் குழந்தை பெற்ற 14 நாட்களில் துணை கலெக்டர் பணிக்கு திரும்பிய சம்பவம் ஒவ்வொருவரையும் நெகிழ வைத்துள்ளது.

இந்தியாவில் கொரேனா தொற்று இன்னும் முழுவதுமாக கட்டுக்குள் வரவில்லை. இதனால் மாநில அரசுகளுடன் இணைந்து அரசு அதிகரிகள் இரவு-பகலாக பாடுபட்டு வருகிறார்கள். உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் சவுமியா பாண்டே துணை கலெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

தற்போது கொரோனா காலம் என்பதால் நோடல் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. அரசு வேலையில் இருப்பவர்கள் 6 மாத காலம் வரை பேறுகால விடுப்பு எடுக்கலாம்.

ஆனால் சவுமியா பாண்டே 14 நாட்களில் பணிக்கு திரும்பியுள்ளார். தனது கைக்குழந்தையுடன் பணிபுரிந்து வருகிறார். மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்ற இவரின் உயர்ந்த எண்ணத்தைக் கண்டு மக்கள் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து சவுமியா பாண்டே கூறுகையில் ‘‘நான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. அதனால் குழந்தை பெற்ற உடனேயே வேலை குறித்து யோசித்தேன். கொரோனா காலம் என்பதால் பொறுப்பு அதிகமாக உள்ளது. கடவுள் பெண்களுக்கு குழந்தைகளை பெற்றெடுத்து வளர்க்கும் வலிமையை கொடுத்துள்ளார்’’ என்றார்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!