பெற்ற பிள்ளைகள் துன்புறுத்துவதாக 80 வயது மூதாட்டி புகார்..!


பிள்ளைகள் துன்புறுத்துவதாக காவல் ஆணையர் அலுவலகத்துக்கு 80 வயது தாய் புகார் அளித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

சென்னையை அடுத்த ஓட்டேரி கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பேபியம்மாள். 80 வயதான இவருக்கு 5 மகன்களும், 4 மகள்களும் உள்ள நிலையில், தன்னைப் பிள்ளைகள் சரிவர கவனிக்கவில்லை என்றும், துன்புறுத்துவதாகவும் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தார்.

இதனைத் தொடர்ந்து, பேபியம்மாளின் மகன்கள் மற்றும் மகள்களை அழைத்து சமாதானம் பேசிய போலீசார், பேபியம்மாளை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!