நான் சூப்பர் மாடல் என்று சொல்ல மாட்டேன்….. மீராமிதுனை கலாய்த்த சம்யுக்தா!


பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அனிதா சம்பத், சுரேஷ், சம்யுக்தா, ரேகா, பாலாஜி, ஆரி, வேல்முருகன், ஷிவானி, நிஷா உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த வாரம் தான் முதல் வாரம் என்பதால், வீட்டில் உள்ள அனைவரும் தங்கள் வாழ்க்கையில் தாங்கள் சந்தித்த அனைத்து சவால்கள் மற்றும் பிரச்னைகள் குறித்தி பேசி வருகின்றனர். நேற்றைய பிக்பாஸ் சீசனின் 3-வது நாளில் சம்யுக்தா பேசினார்.

அப்போது பேசிய அவர் தனது வாழ்வில் தான் சந்தித்த சவால்கள் குறித்து பேசினார். அவரைப் பற்றி அவர் பேசும் போது, “நான் மாடலிங் துறையில் இருக்கிறேன். ஆனால் நான் சூப்பர் மாடல் என்று சொல்ல மாட்டேன்” என்று சொன்ன உடன் பிக்பாஸ் இல்லத்தில் இருந்த அனைவரும் சில நிமிடங்கள் கை தட்டியும், சத்தம் எழுப்பியும் சிரித்தனர். பிக்பாஸ் மீரா மிதுன் தான் எப்போதும் தன்னை ஒரு சூப்பர் மாடல் என்று சொல்லுவார். இதனால் அவரை தாக்கும் விதத்தில் சம்யுக்தா பேசியதற்கு போட்டியாளர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய சம்யுக்தா, “எனது தந்தை மிகவும் கண்டிப்பானவர். 2007-ம் ஆண்டு விஜய் டிவி நடத்திய மிஸ் சென்னை போட்டியில் வெற்றி பெற்றேன். அந்த நிகழ்ச்சிக்கு செல்லும் போது கூட நான் அப்பாவிடம் பொய் சொல்லிவிட்டு தான் செல்லுவேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவெடுத்ததும், அந்த செய்தியை என் அப்பாவிடம் சொல்ல பயந்தேன். நான் பல சவால்களை சந்தித்துள்ளேன்.” என்று பேசி முடித்தார். அவர் தனது குழந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு குறித்தும் பேசினார்.- source: asia.ville

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!