குட்டி தேவதையுடன் அழகிய சிலையாக ஜொலிக்கும் ஆலியா மானசா!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் ராஜா ராணி. இதில் கார்த்திக் மற்றும் செம்பாவாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் சஞ்சீவ்-ஆலியா மானசா. இத்தொடரின் மூலம் இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.

ராஜாராணி தொடரில் கணவன், மனைவியாக நடித்த இருவரும் நிஜத்திலும் காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அந்த காதல் தம்பதியினருக்கு கடந்த மார்ச் மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது.


அந்த குழந்தைக்கு அவர்கள் ஐலா சையத் என பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் சஞ்சீவ் மற்றும் ஆலியா ஜோடி அவ்வப்போது தனது குழந்தையின் கியூட் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஐலா தற்போது தங்கள் பெற்றோர்களையும் மிஞ்சி செம ஃபேமஸ் ஆகிவிட்டார்.

அதனை தொடர்ந்து தற்போது ஆலியா தனது மகளுடன் ஒரே மாதிரியான உடை அணிந்து முதல்முறையாக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.- source: spark

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!