தமிழகம் முழுவதும் சசிகலாவுடன் சுற்றுப் பயணம் செய்வேன்! நடராஜன் அதிரடி பேட்டி..!


ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள் என்று நானே பட்டியல் தருகிறேன் என சசிகலாவின் கணவர் நடராஜன் கூறி உள்ளார்.

சசிகலாவின் கணவர் நடராஜன் தந்தி டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி மாற்றிக் கொள்ளாவிட்டால் அவரை மாற்ற நான் தயங்க மாட்டேன். என்னுடைய மனைவியிடம் இருந்து அதற்கான ஒப்புதலை பெற்றுக் கொண்டு எப்போது வேண்டுமானாலும் நான் அரசியல் களத்தில் இறங்குவேன்.

சசிகலா தன்னுடைய தோழி என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதற்கு மேல் என்ன செக்யூரிடடி தேவை என்று அனைவருமே கேள்வி எழுப்புகின்றனர். சசிகலா என்னுடன் வாழ வேண்டும் என்று அழைத்து வர என்னுடைய தாயாரும், சசிகலாவின் தாயாரும் போயஸ் கார்டன் சென்றனர்.

அப்போது ஜெயலலிதா தட்டு நிறைய வைர நகைகளை வைத்து எடுத்து வந்து இவையெல்லாம் சசிகலா விற்காக செய்திருக்கிறேன் என்று சொன்னார். ஆனால் அதறகு சசிகலாவின் தாயார் கிருஷ்ணவேணி இதெல்லாம் வேண்டாம் என் மகள் அவளுடைய கணவருடன் தான் வாழ வேண்டும் என்று சொன்னார். ஆனால் ஜெயலலிதாவிற்கு சசிகலா தன்னுடன் மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.


இப்போது எனது உடல் நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதத்தில் எனது மனைவி சசிகலாவுடன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வேன். அதற்காக ஒரு நாளோ ஒரு வாரமோ பரோல் கேட்பேன்.

வருமான வரி சோதனை சட்டப்படி இருந்தால் ஏன் மற்றவர்கள் மீது அந்த சட்டம் பாயவில்லை? ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள் என்று நானே பட்டியல் தருகிறேன்.

தினகரனை மக்கள் ஓரளவு ஏற்றுக் கொண்டுள்ளார்கள். மத்திய – மாநில அரசுகள் மீது வெறுப்பில் இருக்கும் மக்கள் ஒரு மாற்றாக தினகரனை நினைக்கிறார்கள்.
கிருஷ்ணப்பிரியா தவறாக வழி நடத்தப்படுகிறார். தினகரனை கிருஷ்ணப்பிரியா விமர்சிப்பது தவறு. பொது வாழ்வில் இருக்கும் தினகரனை விமர்சிக்க கூடாது. விரைவில் நான் கிருஷ்ணபிரியாவை சந்திப்பேன்.

ஜெயலலிதாவின் வீடியோவை வெளியிட்டதில் தவறு இல்லை. ஆஸ்பத்திரியில் பார்த்து கொண் டிருந்த அமைச்சர்களே ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்றதால் தான் வீடியோவை இப்போது வெளியிட வேண்டிய தாயிற்று. அது ஒரு ஆவணப்படம். அவ்வளவுதான். இவ்வாறு அவர் கூறினார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!