ஐஏஎஸ் கனவை நிறைவேற்ற நினைத்த கணவர்… கடைசியில் ஆசை மனைவிக்கு நேர்ந்த சோகம்!


தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற படிக்க அனுப்பி நிலையில், இறுதியில் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரதாப் என்பவர் சரஸ்வதி என்ற பெண்ணை 6 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின்பு மனைவி ஐஏஎஸ் படிக்க ஆசைப்பட்டுள்ளார்.

இதனால் கர்ப்பிணியாக இருந்த மனைவியை காரைக்குடியில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளார். இதனையடுத்து விடுமுறைக்கு கணவரின் வீட்டிற்கு வந்த சரஸ்வதிக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பயிற்சி மையத்தில் இருந்து கணவரின் வீட்டிற்கு வந்த சரஸ்வதிக்கு கர்ப்பம் கலைந்துள்ளது .இதனால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார் சரஸ்வதி. இந்த வேதனையில் கடந்த 5-ம் தேதி வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் எலி மருந்தை சாப்பிட்டு வாந்தி எடுத்துள்ளார்.

இதனை தெரிந்து கொண்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சை பெற்று வந்த சரஸ்வதி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருமணமான 6 மாதத்தில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.- source: express

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!