12 வயது மூத்தவருடன் காதல் திருமணம் – ஷாக் கொடுத்த பிரபல சீரியல் நடிகை..!


தற்போது சீரியலில் வில்லியாக களமிறங்கி உள்ள நீலிமா ராணி அவர்களின் திருமணம் குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இவருக்கும் அவரது கணவருக்கும் 12 வயது வித்தியாசமாம். ஆனால் இது நாள் வரை எங்களது காதல் குறையவில்லை என தனது திருமண நாளை கொண்டியிருக்கிறார் நீலிமா.

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நீலிமா ராணி. ‘தேவர் மகன்’ படத்தில் தான் இவர் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனப்பிறகு ‘பாண்டவர் பூமி’யில் சிறு பெண்ணாக நடித்திருப்பார். மேலும் பல திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.

வெள்ளித்திரைக்கு பின் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். பெரும்பாலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு ‘மெட்டிஒலி’ தான் முதல் சீரியல். அதன்பிறகு பல சீரியலில் நடித்த நீலிமா ராணிக்கு ‘வாணி ராணி’ சீரியல் அதிக புகழை பெற்று தந்தது. பலருக்கு இவர் திருமணம் ஆனவர் என்று கூட தெரியாது.


அந்த அளவுக்கு தனது அழகை பராமரித்து வருகிறார் நீலிமா. இவருக்கு 21 வயதிலேயே திருமணம் நடந்து விட்டது. இவருக்கு அழகான பெண் குழந்தையும் உள்ளது. தற்போது அவரது திருமண நாளையொட்டி அவருக்கு இன்ஸ்டாவில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நீலிமா ராணிக்கும் அவரது கணவருக்கும் 12 வயது வித்தியாசமாம். இது பெரும் அதிர்ச்சியாக இருந்தாலும் அவர்கள் காதலித்து தான் திருமணம் செய்துகொண்டனராம். அவரிடம் முதன்முதலில் காதலை சொன்னது நீலிமா தானாம். இது நாள் வரையிலும் இருவருக்கும் கொஞ்சம் கூட காதல் குறையவில்லை.

மேலும் இவர்களுக்கு குழந்தை கூட நீலிமா விருப்பப்படி தான் பிறந்ததாம். இவர்களுக்கு திருமணமான 1 வருடத்திற்குள் நீலிமாவின் தந்தை இறந்து விட்டார். அதனால் அவரது தம்பி கல்லூரி போகும் வரை குழந்தை வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். அதனால் இவர்களுக்கு 9 வருடம் கழித்து பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்ததால் தேவதையாய் நினைத்து கொண்டாடியுள்ளனர்.-Source : tamilnadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!