ஒரே நாளில் முகத்திற்கு புத்துணர்ச்சி தரும் கொய்யா இலை எலுமிச்சை பேஸ் பேக்


சருத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீக்கு முகத்திற்கு புத்துணர்ச்சி தரும் கொய்யா இலை எலுமிச்சை பேஸ் பேக்கை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

முக அழகினைக் கூட்ட நாம் பொதுவாக ஃபேஸ் கிரீம், மாய்ஸ்ரைஸர் என பல வகையான கிரீம்களை காசு கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். அந்தவகையில் தற்போது முக அழகினைக் கூட்டும் கொய்யா இலை ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

கொய்யா இலை- 10
எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
பால்- 3 ஸ்பூன்
ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன்

செய்முறை: கொய்யா இலையை சுத்தப்படுத்தி வேக வைத்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன் எலுமிச்சை சாறு, பால், ரோஸ் வாட்டர் சேர்த்துக் கலந்தால் கொய்யா இலை ஃபேஸ்பேக் ரெடி.

இந்த ஃபேஸ்பேக்கினை நீங்கள் முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்துக் கழுவி வர வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முக அழகு நிச்சயம் கூடும்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!