ஆணா? பெண்ணா..? புர்ஜ் கலீபா கட்டிட மின்னொளியில் தெரியப்படுத்திய தம்பதி


வயிற்றில் இருக்கும் குழந்தை ஆண் என்பதை, உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலீபாவில் மின்னொளி விளக்குகளால் அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி மக்களின் கவனத்தை ஈர்த்தது.

துபாயில் வசித்து வரும் தம்பதி அனாஸ் மற்றும் அசலா மர்வா. இவர்களுக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அசலா மர்வா மீண்டும் கர்ப்பமானார். அப்போது அவருக்கு வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்பதை ஸ்கேன் மூலம் பார்த்து தெரிவிக்க பிரமாண்டமான விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக புர்ஜ் கலீபா கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இரவு நேரத்தில் கவுண்ட்டவுனுடன் வயிற்றில் இருக்கும் குழந்தை குறித்த தகவலை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருக்க திடீரென்று கட்டிடம் முழுவதும் நீல நிற விளக்கொளியில் ‘இட்ஸ் அ பாய்’ அதாவது அவரது வயிற்றில் இருப்பது ஆண் குழந்தைதான் என்பதை உறுதிப்படுத்தும் தகவல் வெளியிடப்பட்டது.

இதனை அடுத்து குடும்பம் முழுவதும் உற்சாகத்தில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்த இந்த நிகழ்ச்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
– source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!