தற்கொலை செய்த சுஷாந்த் இப்படிப்பட்டவரா..? நயன்தாரா பட வில்லன் பகீர்..!


பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த மாதம் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார்.. அந்த விவகாரம், தற்போது அவரது காதலி ரியா சக்கரபோர்த்தியின் மீது சந்தேகமாக மாறி, அவர் கைது செய்யப்படும் அளவுக்கு வந்துள்ளது. ஆனாலும் தற்போது ரியாவுக்கு ஆதரவாக பாலிவுட் மட்டுமல்லாது மற்ற திரையுலகில் இருந்தும் பலர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்..

“இதற்கு காரணம் சுஷாந்த் எப்படிப்பட்டவர் என்பது பலருக்கும் தெரியும், அதுதான் ரியாவுக்கு ஆதரவான குரலாக வெளிப்பட்டு வருகிறது” என அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார் பாலிவுட்டின் பிரபல இயக்குனரும் இமைக்கா நொடிகள் பட வில்லனுமான அனுராக் காஷ்யப்.சுஷாந்த் தனது பட வாய்ப்பை இரண்டு முறை நிராகரித்தவர் என்கிற தகவலை ஏற்கனவே கூறியுள்ள அனுராக் காஷ்யப், சுஷாந்த் பிரச்சனையான மனிதர் என்றும் கூறியுள்ளார்.. மேலும், “கடந்த பத்து வருடங்களாக சுஷாந்த்துடன் பழகியவர்களுக்கு அவரது குணம் நன்றாகவே தெரியும்..

ஒரு மரியாதைக்காக இவ்வளவு நாள் அமைதியாக இருந்தவர்கள், தற்போது சுஷாந்துக்கு ஆதரவாக பேச முன் வராமல், ரியாவுக்கு ஆதரவு தருகிறார்கள் என்றால் என்ன அர்த்தம் என நீங்களே புரிந்துகொள்ளுங்கள்” என கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, சுஷாந்த்துக்கு உங்கள் படத்தில் வாய்ப்பு கொடுங்கள் என வேண்டுகோள் விடுத்த சுஷாந்தின் மேனேஜருடன். கடந்த மே-22 முதல், சுஷாந்த் மரணமடைந்த ஜூன்-14வரை நடந்த தனது வாட்ஸ் அப் சாட்டிங் விபரத்தையும் வெளியிட்டு, “நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் நினைத்து கொள்ளுங்கள்.. ஆனால் இந்த சமயத்தில் இதை சொல்லித்தான் ஆகவேண்டும்” என்றும் கூறியுள்ளார் அனுராக் காஷ்யப்.- source: dinamalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!