பாறைக்குழியில் குளிக்க போன அண்ணன்- தங்கை.. பலியான சோகம்


திருப்பூரில் பயன்பாடில்லாத பாறைக்குழியில் குளிக்க சென்ற இளம்பிஞ்சுகளான அண்ணன் – தங்கை தண்ணீரில் மூழ்கி பலியான் சம்பவம் சோகத்தைத ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் அம்மாபாளையம் ராமகிருஷ்ணா வீதியை சேர்ந்த கணேசன் மனைவி ஈஸ்வரி என்பவர் கணவரை பிரிந்த நிலையில் சரவணகுமார் (வயது 10) , ரோஷினி (வயது 8) ஆகிய இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். சனிக்கிழமை மதியம் தனது தோழி வீட்டுக்கு ஈஸ்வரி சென்றுள்ளார். மாலை ஈஸ்வரி வீட்டுக்கு வந்து குழந்தைகளை தேடிய போது காணவில்லை. இதனால் அவர் திருமுருகன்பூண்டி போலீசில் புகார் செய்தார்.

போலீஸ் விசாரணையில் இரு குழந்தைகளும் சனிக்கிழமை மதியம் முதல் மாலை வரை அங்குள்ள கானக்காடு பாறைக்குளியில் குளித்து விளையாடிக் கொண்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இன்று காலை பாறைக்குழியில் தேடிய நிலையில், குழந்தைகள் இருவரும் பிணமாக மிதந்தனர். பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு மேல் விசாரணை செய்து வருகிறார்கள்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!