ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த காதலன்… காதலியால் உயிர் பிழைத்த அதிசயம்..!


ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த காதலனை வார்டுக்கே சென்று திருமணம் செய்த காதலியால் உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காதலின் வார்டுக்கே சென்று இளம் பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு நிகழ்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

முன்பே முடிவு செய்த பல திருமணங்கள் கூட நடத்த முடியாமல் போயுள்ளன, சில திருமணங்கள் குறைவான ஆட்களுடன் எளிமையாக நடந்துள்ளன.

இந்தநிலையில், அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த காதலனை, கொரோனா வார்டுக்கே சென்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கார்லேஸ் முனிஸ் என்பவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, சான் ஆண்டனியோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

அவர் செயற்கை சுவாசக் கருவிகள் மூலம் சுவாசித்து வந்தார். இருப்பினும் நிலைமை மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து கடந்த 11-ஆம் தேதி, அவரது காதலி கிரேஸ் என்பவர், தனது காதலனுடன் கைகோர்க்க விரும்பினார்.அதன் படி, நேரடியாக மருத்துவமனைக்கே சென்று, அவர் சிகிச்சை பெறும் போதே, நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின் திருமணம் முடிந்த அடுத்த சில நாட்களிலே கார்லேஸ் கொரோனாவில் இருந்து மீண்டு ஆச்சரியப்படுத்தினார்.அவருடைய உண்மையான காதலே அவர் குணமாவதற்குக் காரணம் என்று மருத்துவர்கள் .- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!