சாமியாரை துன்புறுத்தி துன்புறுத்தியே விபரீத முடிவை எடுக்க வைத்த சப்-இன்ஸ்பெக்டர் !


சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள புளியம்பட்டி குண்டாங்கல் காடு பகுதியை சேர்ந்தவர் 40வயதான சாமியார் சரவணன். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமியார் சரவணன் திடீரென்று மாயமாகி விட்டார். அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதனிடையே அவரது வீட்டிற்கு அருகே உள்ள பாறை திட்டு பகுதியில் சாமியார் சரவணன், உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் தேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் இறப்பதற்கு முன்னதாக தேவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி மைக்கேல், அவரை சந்தித்து எச்சரித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அந்த ஊர் துணை ஆய்வாளர் ‘அந்தோணி மைக்கேல்’ தொடர்ந்து குடைச்சல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சரவணன் மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது.

இதனிடையே சாமியார் சரவணன் தான் இறப்பதற்கு முன்பு ஒரு வீடியோவை பதிவு செய்து தன் நண்பர்களுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி உள்ளார். தற்போது அந்த வாட்ஸ்-அப் வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி மைக்கேல் என்பவர் தன்னை தாக்கியதாகவும், தன் ஆன்மா அவரை சும்மா விடாது எனவும், போலீசார் தாக்கியதால் தான், நான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

சிவநாடியார் சரவணனின் மகன் ஷங்கர், தனது தந்தை எந்த தவறும் செய்யாமல் அனைவருக்கும் முன்னால் அடித்து அவமானப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததிலிருந்து #JusticeForSaravananஹாஸ்டேக் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வேளையில், எஸ்.ஐ. அந்தோணி மைக்கேல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சிவநாடியார் சரவணனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.- source: kathir

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!