எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்… சஞ்சய் தத் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி..!


நடிகர் சஞ்சய் தத் புற்றுநோய் சிகிச்சைக்காக மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

நடிகர் சஞ்சய் தத்துக்கு கடந்த 9-ம் தேதி கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள லீலாவதி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நலம்பெற வேண்டி திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தனர்.

இதற்கிடையே, சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்று நோய் பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியானது. புற்று நோய் சிகிச்சைக்காக சஞ்சய் தத் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், நடிகர் சஞ்சய் தத் புற்றுநோய் சிகிச்சைக்காக மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தனது வீட்டிலிருந்து புறப்படும் முன் கூறுகையில், எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என தெரிவித்தார். சஞ்சய் தத் முகக்கவசத்துடன் வீட்டிலிருந்து வெளியேறும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!