பிரபல பாலிவுட் இயக்குனர் காலமானார்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


நடிகர் மாதவனை வைத்து ’எவனோ ஒருவன்’ என்ற படத்தை கொடுத்த இயக்குனர் நிஷிகாந்த் காமத் இன்று காலமானார்.

தமிழில் மாதவன் நடித்த ’எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் பிரபல பாலிவுட் இயக்குனர் நிஷிகாந்த் காமத். இவர் சில காலமாக கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று காலை இவர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இதை மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது.

தற்போது மாலை 4:24 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

நிஷிகாந்த் காமத், தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெற்றி பெற்ற ’த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!