கூலிப்படை மூலம் புருஷனை போட்டுத்தள்ள முயன்ற மனைவி… காதலன் தலைமறைவு..!


கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க தடையாக இருந்ததால் கூலிப்படையை வைத்து கணவனை கொலை செய்ய முயற்சி செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த கணேஷ், காயத்ரி தம்பதிக்கு 4 வயதில் மகள் இருக்கிறார். காயத்ரி திருமணத்திற்கு முன்பு யாசின் என்பவரை காதலித்ததாகவும், திருமணத்திற்கு பிறகும் அது தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது. யாசின் காயத்ரி வீட்டுக்கு அருகே ப்ளே ஸ்கூலை தொடங்கினார்.

பிசினஸ் செய்ய தனது அண்ணனுக்கு 10 லட்ச ரூபாய் பணம் வேண்டுமென கேட்டு, காயத்ரி தன் கணவனிடம் இருந்து யானினுக்கு பணம் வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில், கணேஷ் பணத்தை அண்ணனிடம் இருந்து திரும்ப வாங்கும் படி காயத்ரியிடம் கூறியுள்ளார். இதனால் கள்ளக்காதல் வெளியே தெரிந்துவிடும் என அஞ்சிய காயத்ரி கூலிப்படை மூலம் கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.


அதன்படி, வீட்டின் பின் கதவை காயத்ரி திறந்துவைக்கவே, உள்ளே நுழைந்த யாசின் மற்றும் கூலிப்படையை சேர்ந்த இரண்டு பேர் கணேஷை வெட்டி, அவரது ஆணுறுப்பை சிதைத்து அங்கிருந்து சென்றுவிட்டனர். போலீஸ் விசாரணை என்று வந்தால் கணேஷூக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு உள்ளது என்றும், அந்தப்பெண் தான் இப்படி செய்து விட்டார் என கூறலாம் என்று முடிவு செய்திருந்தார்.

ஆனால் காவல்துறை விசாரணையில் காயத்ரி உண்மையை ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து காயத்ரி, கூலிப்படையை சேர்ந்த விஜயகுமார், கருணாகரன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள யாசினை தேடிவருகின்றனர். கணேஷ் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.- source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!