பெண் போதை உள்ளவரா பாலுமகேந்திரா..? நடிகையின் கொலை ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர்!


தமிழ் சினிமாவில் பிழைக்கத் தெரியாத இயக்குனர் என அனைவராலும் அழைக்கப்படுபவர் பாலுமகேந்திரா. பல பிரம்மாண்ட படைப்புகளை கொடுத்தும் கடைசி வரை எதுவும் சேர்த்து வைக்காமல் சென்றுவிட்டார்.

ரஜினியின் முள்ளும் மலரும், ஜானி படம் எல்லாம் இன்னும் ரசிகர்களுக்கு ஃபேவரிட் தான். அப்பேர்ப்பட்ட எதார்த்த கலைஞன் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் இவ்வளவு மோசமானவரா என்பதை யோசித்து கூட பார்க்க முடியவில்லை.

பாலுமகேந்திராவுக்கு பெண்கள் பழக்கம் அதிகமாக இருந்ததாம். அடிப்படையில் பாலுமகேந்திரா மிகவும் ஒழுக்கம் கேட்டவராம். தான் ஒரு பெண்ணை அடைய வேண்டும் என்று நினைத்தால் அடையாமல் விட மாட்டாராம்.

அப்படித்தான் நடிகை சோபா என்ற நடிகையை தன்னுடைய ஆசைக்கு இணங்காததால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு தூண்டி விட்டாராம். 30 வயது அதிகம் உள்ள பாலுமகேந்திரா நடிகை சோபாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்.

அதற்காக அவருக்கு பல இடைஞ்சல்கள் கொடுத்துள்ளார். இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆனால் சமீபகாலமாக பயில்வான் ரங்கநாதன் பேச்சுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவர் கூறும் சிலதில் பெரும் பொய் கலந்திருப்பதால் இதை நம்புவதா, வேண்டாமா என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.-Source: pettai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!