பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் இப்ப எப்படியிருக்காங்க..?


கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் சிகிச்சைக்கு பின் குணமடைந்து தற்போது வீடு திரும்பினார்.

பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 11 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள் மும்பையில் உள்ள நனாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவுகள் கடந்த 12 ஆம் தேதி வெளியானது. அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது.

ஆனால் அபிஷேக் பச்சனின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது ஆரத்யாவுக்கும் கொரோனா இருப்பது உறுதியானது.

இதையடுத்து இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். ஆனால் கடந்த 18 ஆம் தேதி அதிகாலை ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனால், இருவரும் அமிதாப் மற்றும் அபிஷேக் சிகிச்சை பெற்றுவந்த நனாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகி்ச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆரத்யாவுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளதாகவும், இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாகவும் அமிஷேக் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், தனக்கும், தந்தை அமிதாப் பச்சனும் இன்னும் கொரோனாவில் இருந்து குணமடையாததால் தொடர்ந்து மருத்துவமனையிலேயே
சிகிச்சை பெற்றுவருவதாகவும், குடும்பத்தினர் கொரோனாவில் இருந்து குணமடைய தொடர்ந்து பிரார்த்தனை செய்துவரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அபிஷேக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கொரோனாவில் இருந்து குணமடைந்த ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யா மருத்துவமனையில் இருந்து கார் மூலம் வீடு திரும்பினர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!