மகள்கள் கண் முன்னே பத்திகையாளருக்கு நடந்த கொடூரம் – டெல்லியில் பரபரப்பு.!


டெல்லியில் மகள்கள் கண் முன்னே பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

உத்தர பிரசேதம் மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி தனது இரு சக்கர வாகனத்தில் இரண்டு மகள்களுடன் சென்றுள்ளார். டெல்லி அருகே நேற்றிரவு 10.30 மணி அளவில் அடையாளம் தெரியாத கும்பர் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில் தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த விக்ரம் ஜோஷி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக 9 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

விக்ரம் ஜோஷி தனது மருமகளை ஒரு கும்பல் துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகார் அளித்த நான்கு நாட்களுக்குப்பிறகு விக்ரம் ஜோஷி தாக்கப்பட்டுள்ளார். அவர் சுடப்பட்ட இடத்தில் இருந்து சிசிடிவி கேமராவில் இந்த கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!