அமெரிக்கப் பாடசாலையொன்றின் வகுப்பறையில் 17 வயது மாணவன் ஒருவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆசிரியை ஒருவர் கடந்த திங்கட் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
30 வயதான வலேரியா ஆஷ்லி கொஸ்டாடோனி என்பவரே கைது செய்யப்பட்டவராவார். பராகுவே நாட்டில் பிறந்த வலேரியா 1990களில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர் ஆவார்.
இவர் புளோரிடா மாநிலத்தின் மியாமி நகரிலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். தற்போது 17 வயதான மாணவன் ஒருவனுடன் தகாத உறவு கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவன், மேற்படி ஆசிரியையுடன் இரு வருடங்களாக பாலியல் உறவு கொண்டிருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வலேரியாவின் வீட்டிலும், காரிலும், வெறிச்சோடிய வகுப்பறையிலும் தாம் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் பொலிஸாரிடம் அம்மாணவன் தெரிவித்துள்ளான். தனது சம்மதத்துடனேயே இந்த உறவு இடம்பெற்றதாக அம்மாணவன் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியை வலேரியா ஆஷ்லி கொஸ்டாடோனி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை 15,000 டொலர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.-Source: metronews
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!