வகுப்­ப­றை­யில் மாணவனுடன் ஆசிரியை செய்த கேவலமான செயல் அம்பலம்..!


அமெ­ரிக்கப் பாட­சா­லை­யொன்றின் வகுப்­ப­றையில் 17 வயது மாணவன் ஒரு­வ­னுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக கூறப்­படும் ஆசி­ரியை ஒருவர் கடந்த திங்கட் கிழமை கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

30 வய­தான வலே­ரியா ஆஷ்லி கொஸ்­டா­டோனி என்­ப­வரே கைது செய்­யப்­பட்­ட­வ­ராவார். பரா­குவே நாட்டில் பிறந்த வலே­ரியா 1990களில் அமெ­ரிக்­கா­வுக்கு குடி­பெ­யர்ந்­தவர் ஆவார்.

இவர் புளோ­ரிடா மாநி­லத்தின் மியாமி நக­ரி­லுள்ள பாட­சா­லை­யொன்றில் ஆசி­ரி­யை­யாக பணி­யாற்றி வந்தார். தற்­போது 17 வய­தான மாணவன் ஒரு­வ­னுடன் தகாத உறவு கொண்­டி­ருந்­த­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

பாதிக்­கப்­பட்ட மாணவன், மேற்­படி ஆசி­ரி­யை­யுடன் இரு வரு­டங்­க­ளாக பாலியல் உறவு கொண்­டி­ருந்­த­தாக வாக்­கு­மூலம் அளித்­துள்ளான் என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.


வலே­ரி­யாவின் வீட்­டிலும், காரிலும், வெறிச்­சோ­டிய வகுப்­ப­றை­யிலும் தாம் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தா­கவும் பொலி­ஸா­ரிடம் அம்­மா­ணவன் தெரி­வித்­துள்ளான். தனது சம்­ம­தத்­து­ட­னேயே இந்த உறவு இடம்­பெற்­ற­தாக அம்­மா­ணவன் கூறி­ய­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

ஆசி­ரியை வலேரியா ஆஷ்லி கொஸ்டாடோனி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை 15,000 டொலர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.-Source: metronews

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!