பெருமிதத்துடன் விட்டுக் கொடுக்கும் இயக்குநர்… விரைவில் வெளியாகுமா சச்சின் 2..?


விஜய் நடிப்பில் கடந்த 2005-ல் வெளியன படம் சச்சின். நாயகியாக ஜெனிலியா, காமெடியனாக வடிவேலு என உருவான இந்தப் படத்தை மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கியிருந்தார்.

மாஸ் ஹீரோவாக இருந்த விஜய்க்கு ஒரு ஜாலியான படமாக சச்சின் இருக்கும். தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, இந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி ஹிட்டானது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என ரசிகர்கள் அவ்வப்போது இயக்குநரிடம் கேட்பதுண்டு. அதற்கு இயக்குநர் தற்பொழுது பதில் அளித்திருக்கிறார். இதுகுறித்து ஜான் மகேந்திரன் கூறும்போது, “ ரசிகர்கள் எப்போதுமே சச்சின் 2 படம் மீது ஆர்வமாக இருக்கிறார்கள். இரண்டாம் பாகத்தில் விஜய் நடிப்பதை பார்க்க எனக்கும் ஆர்வம் உள்ளது. இயக்குநர் யாரென்றாலும் எனக்கு ஓகே தான். சச்சின் 2 நடந்தால் நன்றாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் பெருமிதத்துடன் சச்சின் 2வை யார் வேண்டுமென்றாலும் இயக்கலாம் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.-Source: indnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!