நடிகை ரேகாவின் பங்களாவிற்கு அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்… ஏன் தெரியுமா..?


பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மகள் ஆராதையா ஆகியோருக்கு கொரோனா உறுதியானது. மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது மூத்த பாலிவுட் நடிகை ரேகாவின் வீட்டிற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அவரது இரு பாதுகாப்பு காவலர்களில் ஒருவருக்கு கொரோனா உறுதியானது.

புகழ்பெற்ற தமிழ் நடிகர் ஜெமினி கணேசனின் மகள் தான் ரேகா. இவர் 80களில் மற்றும் தொண்ணூறுகளில் பாலிவுட்டில் முன்னணி பெண்மணியாக அமிதாப் பச்சனுடன் பல படங்களில் நடித்தார். மும்பையில் பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள ‘சீ ஸ்பிரிங்ஸ்’ என்ற அவரது பங்களா சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஜான்வி கபூர், அமீர்கான் மற்றும் கரண் ஜோஹர் உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்களின் ஊழியர்களை கொரோனா தாக்கியதால் அனைவரின் வீட்டிற்கு சீல் வைக்க முடிவெடுத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.-Source: express

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!