22 வயது ஆசிரியை எடுத்த அதிர்ச்சி முடிவு…. காரணம் தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க


கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஷீலா என்பவரது 22 வயது மகள் அனுஷா பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அனுஷாவிற்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, நேற்று திருமணம் என்று தேதி குறிக்கப்பட்டது.

இந்த நிலையில், அனுஷா நேற்று முன்தினம் இரவு தூங்குவதற்காக தனது அறைக்குள் சென்று உள்ளார். அதன் பிறகு அனுஷா நீண்ட நேரம் ஆகியும் காலையில் தூங்கி எழவில்லை.

இதனால் அனுஷாவின் தாயார் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, அனுஷா அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து சடலமாக தொங்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததை அடுத்து, இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.-Source: tamyugam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!