ஜாலியாக காவல் நிலையத்தில் சரக்கு அடிக்கும் காவலர்கள்’.. ‘வைரலாகும் வீடியோ’!


ஆந்திராவில் காவலர்கள் சிலர் காவல் நிலையத்தில் மது அருந்தும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் சட்ட விரோதமாக மதுபானங்கள், மணல் மற்றும் போதை பொருட்கள் ஆகியன கடத்தப்படும் சம்பவங்களை தடுக்க போதை பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு ஒன்றை அந்த மாநில அரசு நியமித்து உள்ளது.

இதனை அடுத்து அந்த மாநிலத்தில் சட்ட விரோதமாக கடத்தப்படும் பொருட்களை இந்த பிரிவினர் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்படும் மதுபானங்கள், போதை பொருட்கள் என அனைத்தும் காவல் நிலையத்தில் தனி அறையில் வைக்கப்படும்.

இந்நிலையில் அனந்தபுரம் இந்துப்பூர் காவல் நிலையத்தில் 2 தலைமை காலவர் மாற்று காவலர் ஒருவர் ஆகிய 3 பேரும் சேர்ந்து, பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மதுபானங்களை எடுத்து மது அருந்துகின்றனர்.

இதனை அடுத்து இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை அடுத்து இந்த செயலை செய்த திருமலேஷ், கோபால் மற்றும் நூர் அகமத் ஆகிய 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.-Source: tamyugam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!