16 வயது சிறுமியை கடத்தி சென்ற கல்லூரி மாணவன்’.. ‘கோவையில் பகீர்..!


கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள இடையன்குளம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஹர்ஷத், அதே பகுதியை சேர்ந்த 16 வயதான பள்ளி மாணவி ஒருவரை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

இதனை அடுத்து இருவரும் காதலித்து வந்து உள்ளனர். இந்நிலையில் சம்பவம் நடந்த நாளன்று சிறுமி காணாமல் போயுள்ளார். மேலும் வெகு நேரமாகியும் சிறுமி வீட்டிற்கு வரவில்லை. இதனால் குடும்பத்தினர் சிறுமியை தேடி பார்த்த நிலையில், சிறுமி கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஹர்ஷத் என்ற இளைஞர் தான் சிறுமியை கடத்தி சென்று உள்ளார் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து ஹர்ஷத்தின் போன் நம்பரை கண்டுபிடித்து அதன் மூலம் ஹர்ஷத் தங்கி உள்ள அவரது வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றுள்ளனர்.

அப்போது அங்கு இருந்த சிறுமியை மீட்டு போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் திருமண ஆசைகாட்டி ஹர்ஷத் சிறுமியை அழைத்து வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஹர்ஷத்தை கைது செய்தனர்.-Source: tamyugam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!