சமோசா சாப்பிட்ட புத்த துறவிக்கு அரங்கேறிய சோகம்..!


கர்நாடக மாநிலம் உத்திரகன்னடா கார்வார் பகுதியில் திபெத்தியன் முகாம் ஒன்று உள்ளது. இங்கு பல நாடுகளை சேர்ந்த புத்தமத துறவிகள் தங்கி பூஜை செய்தும், புத்த மதத்தை காற்றும் வருகின்றனர்.

இந்நிலையில் இங்கு 2 வது முகாமில் 18 வயதான மங்கோலியா நாட்டை சேர்ந்த போகர்ஜாவாக்லன் தஸ்ஜோர்ஜா என்ற இளைஞர் தங்கி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று தனது அறையில் அமர்ந்து சமோசா சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார். இதை பார்த்த சக புத்த துறவிகள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் தொண்டையில் சமோசா சிக்கி உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் உடனடியாக அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த முகாமில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.-Source: tamyugam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!