சென்னை விடுதியில் பின்லாந்து பெண் மர்மமாக மரணம்! பின்ணனியில் அதிர்ச்சி..!


பின்லாந்தைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி சென்னை ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

பின்லாந்தைச் சேர்ந்த ஹீலா (23). தனது நண்பர் பலோம்கியுடன் சென்னைக்கு சுற்றுலா வந்துள்ளார். தில்லியில் பல இடங்களைச் சுற்றிப்பார்த்துவிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், லீலாவை அறையில் விட்டுவிட்டு பலோம்கி மட்டும் கிளம்ப முயன்றார். இதில் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் லீலாவின் அறையைச் சோதனையிட்டபோது அங்கு அவர் இறந்து கிடந்துள்ளார்.


இதையடுத்து திருவல்லிக்கேணி போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார் லீலாவின் உடலைக் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

லீலாவின் அறையிலிருந்து ஏராளமான போதை மாத்திரைகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

தொடர்ந்து லீலாவின் நண்பர் பலோம்கியை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!