ஆற்றுக்கு அருகில் துண்டு துண்டாக கிடந்த கணவரின் உடல்… மனைவி பகீர் தகவல்..!


ஒடிஷா மாநிலம் கட்டாக்கை சேர்ந்த பினோத் மண்டல் என்ற நபருக்கும், நமீதா என்ற இளம்பெண்ணிற்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் பினோத் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி காணாமல் போனார். இதனை அடுத்து போலீசார் இவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், அங்குள்ள மகாநதி ஆற்றுக்கு அருகில் பினோத்தின் சடலம் துண்டு துண்டாக இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து போலீசார் பினோத் கொலை செய்யப்பட்டது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில் பினோத்தின் மனைவியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

அதில், நமீதா தனது ஆண் நண்பருடன் சேர்ந்து தான் பினோத்தை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து போலீசார் நமீதாவை கைது செய்தனர். இந்நிலையில் மனைவியே கணவனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.-Source: tamyugam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!