பாடகி ஜானகியின் உடல் நிலை குறித்து வதந்தி.. எஸ்பி பாலசுப்பிரமணியம் கடும் கண்டனம்


பழம்பெரும் பின்னணி பாடகி ஜானகி அவர்களின் உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதற்கு பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகில் பழம்பெரும் பாடகி ஜானகி. வயது 80. இவர் 17 மொழிகளில் 45 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார்.2016ம் ஆண்டுன் திரை உலகைவிட்டு விலகிய அவர் ஹைதராபாத்தில் உள்ள தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஜானகியின் உடல் நிலை குறித்து வதந்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரவியது. இந்நிலையில் மீண்டும் அவரது உடல் நிலை குறித்து வதந்தி பரவி உள்ளது. இந்த வதந்தி சமூக வலைதளத்தில் பரபரப்பை உண்டாக்கிய நிலையில் ஜானகியின் மக்ன் முரளி கிருஷ்ணா மறுப்பு தெரிவித்தார். ஜானகியும் தனது உடல் நிலை குறிந்த வதந்தி குறித்து வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில் ஜானகி அவர்களின் உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதற்கு பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இன்று காலை ஜானகி அம்மா அவர்களின் உடல் நிலைகுறித்து கேட்டு 20க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன. . முட்டாள் தனமான வதந்தியை சிலர் பரப்பி உள்ளார்கள்.. நான் ஜானகி அம்மாவுடன் பேசினேன். அவர் மிக மிக நல்ல உடல்நலத்துடன் உள்ளார். அவர் மீது அன்பு உள்ள கொண்ட கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த செய்தி பேரிடியாக இருக்கும். .தயவு செய்து சமூக வலைதளத்தை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துங்கள். இந்த மாதிரி கேவலமான காரியங்களை கேலியாக செய்ய வேண்டாம். ஜானகி அம்மா நல்ல உடல்நலத்துடன் பாதுகாப்பாக இருக்கிறார். அவர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்வார்” இவ்வாறு கூறியுள்ளார்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!