அ.தி.மு.க.வில் இணையப் போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கே.பாக்யராஜ்!


நடிகரும், இயக்குனருமான கே.பாக்யராஜ் ‘அ.தி.மு.க.வில் இணையப் போவதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழக அரசியல் களம் பல அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. சசிகலா சிறைக்குச் சென்றதால், அவர் சார்பில் டிடிவி தினகரன் அ.தி.மு.க.வில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

மேலும் ட்விட்டரில் கருத்துகளைக் கூறிவந்த கமல்ஹாசன், திடீரென அரசியலில் குதித்தார். பல வருடங்களாக அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஜினியும் திடீரென அரசியலில் இறங்கியுள்ளார். விஷாலும் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இயக்குநர் மற்றும் நடிகரான கே.பாக்யராஜும் அரசியலில் குதிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். தனியார் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ‘‘அரசியலில் இறங்கினால் அ.தி.மு.க.வில் இணைவேன் என்று அதிரடியாக கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இன்று சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது என்றும் அவரின் பக்தனாக, கட்சியை வீழ்ச்சியடைய விடாமல் இருக்க தன்னால் முடிந்த அளவுக்குப் பாடுபடுவேன் என்றும் கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!