‘மனைவி செய்த மோசமான காரியத்தால் கணவனுக்கு நேர்ந்த அவலம்’..வெளியான பகீர் உண்மை!


சேலம் மாவட்டம் கந்தப்பட்டி அருகே உள்ள செஞ்சிக்கோட்டையை சேர்ந்த ராஜகிரி – பூங்கொடி தம்பதியினர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இவர்களது மகள் பருமடைந்த நிலையில், பூங்கொடி தனது கணவருடன் சேர்ந்து வாழ முடிவு செய்து இருவரும் ஒரே வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது கடந்த 18 நாட்களுக்கு முன்பு குழந்தைகள் ஊருக்கு சென்ற நிலையில், இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது மீண்டும் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

அப்போது கோபமடைந்த பூங்கொடி தனது கணவரை தாக்கி கொலை செய்துவிட்டு யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்புறம் புதைத்துவிட்டு, அதே வீட்டில் ஒரு வாரம் வசித்து வந்துள்ளார் .
மேலும் ஊரில் இருந்து வந்த பிள்ளைகளிடமும், உறவினர்களிடம் ராஜகிரி வெளியூர் சென்றுவிட்டதாக கூறியுள்ளார். அதன் பிறகு பூங்கொடியும் தலைமறைவாகிவிட்டார்.

இதனை அடுத்து ராஜகிரியின் மகள் வீட்டிற்கு பின்புறம் சென்று பார்க்கையில், அங்கு தேவையில்லாமல் சில பொருட்கள் குவிக்கப்பட்டு இருந்துள்ளது. அதனை அடுத்து இதுகுறித்து அவர் உறவினர்களிடம் கூறியுள்ளார்.

அதன் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது ராஜகிரியின் சடலத்தை எடுத்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பூங்கொடியை தேடி வருகின்றனர்.-Source: yugam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!