முதன் முதலாக தயாரிப்பாளர் மீது பாலியல் புகார் கூறிய பிரபல நடிகர்


பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா தயாரிப்பாளர் ஒருவர் மீது செக்ஸ் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

மீடூ என்ற இயக்கம் மூலம் சமூகவலைதளங்களில் பிரபல நடிகைகள், உடன் நடித்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது செக்ஸ் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் முதன் முதலாக ஒரு நடிகர் தயாரிப்பாளர் மீது மீ டூ புகார் அளித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா. இவர் தான் படவாய்ப்பு கேட்டு அலைந்த காலத்தில் ஒரு ஆண் தயாரிப்பாளரை சந்தித்து வாய்ப்பு கேட்டதாகவும் அதற்கு அந்த தயாரிப்பாளர் வாய்ப்புக்கு ஈடாக தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கூறியுள்ளார்.

பின் தவறாக நடக்க முயன்றார் என்றும், அதை சகித்துக் கொள்ள முடியாமல் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பித்து வந்து விட்டதாகவும் ஆயுஷ்மான் கூறினார். இதுபோன்ற பல கசப்பான சம்பவங்களை எதிர்கொண்டதாகவும் அவர் ஒரு பேட்டியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!