பால்கனியிலிருந்து போஸ் கொடுத்த ஸ்ரேயா.. வைரலாகும் புகைப்படங்கள்..!


ஸ்பெயினில் இருக்கும் ஸ்ரேயா பால்கனியில் நின்று கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா, சில வருடங்களுக்கு முன்பு ரஷ்ய தொழில் அதிபர் ஆண்ட்ரி கோச்சேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் வசித்து வருகிறார். அந்த நாட்டிலும் கொரோனாவுக்கு ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்துள்ளதால், சமூக விலகலை கடைப்பிடிக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால் வீட்டில் முடங்கி உள்ள ஸ்ரேயா கணவர் பாத்திரங்களை கழுவி, வீட்டு வேலைகள் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில்,


தற்போது பால்கனியில் நின்று கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொஞ்சம் சிரிப்பு, இந்த கிரேசி காலங்களில் என்னிடம் இருந்து உங்களுக்கு.. நீங்கள் மகிழ்ச்சியைக் காணலாம் ….எனது பால்கனி காலை வணக்கம்.. என பதிவிட்டுள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!