திடீரென இஸ்லாமியர்களை புகழும் எஸ்.வி சேகர்… வறுத்தெடுக்கும் இணையவாசிகள்.!


நடிகர், இயக்குநர், அரசியல்வாதி என முகங்களை கொண்டவர் எஸ்.வி சேகர். பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி சேகர் வெளியிடும் பல கருத்துகள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருந்து வருகிறது. குறிப்பாக கொரோனா பரவ டெல்லியில் நடந்த இஸ்லாமிய மாநாடு தான் காரணம் ஒரு தரப்பினர் கூறியப்போது அதற்கு எஸ்.வி சேகர் ஆதரவு கரம் நீட்டியிருந்தார்.

இந்நிலையில் சமீப காலங்களாக அவர் வெளியிடும் கருத்துக்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது. இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அவர் ட்விட்டரில் பதிவிடுவதே அந்த ஆச்சரியத்திற்கு காரணம்.

சில தினங்களுக்கு முன்பு “கொடிய கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கு பல்வேறு சிகிச்சைகளை அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில், (ஊநீர்) plasma ரத்த தானம் செய்ய முன் வந்திருக்கும் இஸ்லாமிய மக்களை பாராட்டி, நன்றிகள் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். இதுவே மத ஒற்றுமை.” என்று பதிவிட்டிருந்தார்.

தற்போது ரமலான் நோன்பு ஆரம்பித்திருக்கிறது. எஸ்வி சேகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முஸ்லீம் பெண் ஒருவருக்கு அரிசிப்பையை வழங்குகிறார். மேலும் “இன்று ரமலான் நோன்பு முதல் நாள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதைப் பார்த்த இணையவாசிகள் இப்படி நடிக்கத் தேவையில்லை என கூறி வருகின்றனர். இதேபோல் எச்.ராஜா போன்றவர்களும் அண்மைக்காலமாக இஸ்லாமியர்களை புகழ்ந்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.-Source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!