விலங்கு மாமிச சந்தைகளை மூடாவிட்டால் இன்னும் கொடிய வைரஸ் தோன்றும் – நிபுணர்கள் எச்சரிக்கை


சீனாவின் விலங்கு மாமிச சந்தைகளை மூடாவிட்டால் கொரோனா போல் இன்னும் கொடிய வைரஸ் தோன்றும் அபாயம் உள்ளது என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

உகான் நகரில் கடல் மாமிச உணவு விற்கும் சட்ட விரோத சந்தையிலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சீனாவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்புப் பிரிவு இயக்குநர் காவோ ஃபூ தெரிவித்திருந்தார்.கரோனா வைரஸ் விலங்கிலிருந்துதான் மனிதருக்குப் பரவியிருக்கிறது என்று பரவலாக நம்பப்படுகிறது, ஆனால் சீனா அதிகாரப்பூர்வமாக இதனை அறிவிக்கவில்லை.

சீன மக்களின் வாழ்க்கையில் விலங்குகள் மற்றும் மாமிச சந்தைகள் முக்கியமானவை ஆனால் அது தற்போது உலகம் முழுவதும் கொரோனாவாக கோரதாண்டவம் ஆடி வருகிறது.

சீனாவில் செயல்பட்டு வரும் விலங்குகள் மற்றும் மாமிச சந்தையிலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது என்ற செய்திகளையடுத்து அந்த சந்தைகளை உடனடியாக மூடுமாறு அமெரிக்க எம்.பி.க்கள் சீனாவுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

மனிதர்களுக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுத்தும் வகையில் சீனாவின் மாமிச உணவு மற்றும் மிருகங்களுக்கான சந்தை செயல்படுவதால் உடனடியாக அந்த சந்தைகளை மூடுமாறு அமெரிக்காவுக்கான சீன தூதர் சியூ தியாங்கியிடம் இடம் அமெரிக்க எம்பிக்கள் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இன்னும் எத்தனை உயிர்ப்பலிகளை இதனால் நாம் அளிக்க இருக்கிறோம் என கேள்வி எழுப்பியுள்ள செனட்டர்கள்,இந்த நிலைக்கு தீவிர முன்னெச்சரிக்கைத் தேவைப்படுகிறது என்று சீனாவுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான கரண்ட் ஒபீனியன்ஸ் என்ற இதழில் எதிர்கால நோய்க்கிருமிகள் சீன மாமிச சந்தைகளில் இருந்துதான் பரவும், அதன் மையம் இதுபோன்ற சந்தைகள்தான் என்று கூறப்பட்டிருந்தது.சீனாவில் 10 ஆண்டுகள் பணியாற்றிய வைரஸ் நிபுணர் பீட்டர் டஸாக், அங்கு நூற்றுக் கணக்கில், ஆயிரக்கணக்கில் விலங்குகளும் பண்ணைகளும் உள்ளன.

வைரஸ் இன்னமும் கூட அங்கு இருக்கலாம். ஆகவே நாம் இதிலிருந்து மீண்டு வந்தாலும் இந்த வைரஸ் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தத் தயாராக இருக்கிறதா என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!