துப்புரவு பணியாளர்களை நெகிழ வைத்த விஜய் ரசிகர்கள்


கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவிக்கரம் நீட்டி நெகிழ வைத்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி உள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில், தூய்மை பணியாளர்களுக்கு முக கவசங்கள், கையுறை மட்டுமின்றி அவர்களின் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி அடங்கிய தொகுப்பை வழங்கி உதவியுள்ளனர்.


இதேபோல் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரமும் வழங்கி உள்ளனர். மக்கள் நலன் காக்க உயிரை பணயம் வைத்து பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உதவிய விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!