உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து 20 பேர் பரிதாபமாக பலி..!


காங்கோவில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்த சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ குடியரசின் பிரஸ்விலி மாகாணத்தின் பல்வேறு பகுதிகள் நேற்று கனமழை பெய்தது. அம்மாகாணத்தின் கின்டெலி பகுதியிலும் இடிமின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.

இந்நிலையில், கின்டெலி பகுதியில் கனமழையின்போது மின்னல்கள் மின்னியது. அப்போது அங்கு உள்ள இரண்டு உயர்மின் அழுத்த கம்பிகள் மீது மின்னல் தாக்கியது.

மின்னல்கள் தாக்கியதால் பல உயர்மின் அழுத்த கம்பிகள் அறுந்து விழுந்தன. அப்போது மின்கம்பிகள் தரையில் நின்றுகொண்டிருந்த பலர் மீது விழுந்தது.

இதனால் உயர் மின் அழுத்தம் கொண்ட மின்சாரம் பலர் மீது பாய்ந்தது. இந்த சம்பவத்தில் 20 பேர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!