பட வாய்ப்புக்காக உல்லாசம்… பிரபல இயக்குநர்கள் மீது டிக்டாக் இலக்கியா பகீர்..!


பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில இயக்குனர்களிடம் படுக்கையை பகிர்ந்ததாகவும் ஆனால், அவர்கள் என்னை ஏமாற்றி விட்டதாகவும் டிக்டாக் புகழ் இலக்கியா பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

தெலுங்கு திரைப்பட நடிகையான ஸ்ரீரெட்டி பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் புகார் கூறி வருகிறார். அவ்வப்போது அவர்களின் பெயர்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்துவார்.

அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த டிக்டாக் புகழ் இளம்பெண்ணுக்கு ஒரு கொடுமை நிகழ்ந்துள்ளது. அண்மையில் தனது பெயரை பயன்படுத்தி சிலர் மோசடி செய்வதாக இலக்கியா புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், சினிமா ஆசையால் தான் படுக்கையை பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டதாகவும் ஆனால் தன்னை அனுபவித்த இயக்குனர்கள், அதன் பின்னர் பட வாய்ப்புக்கு தன்னை அழைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

நான் அவர்களுக்கு போன் செய்தாலும் போனை எடுப்பதில்லை என்றும் அவர் பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் அவரை சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் பட கேள்விகளால் வறுத்தெடுத்து வருகின்றனர்.

பட வாய்ப்புக்காக தவறு என்று தெரிந்தும் அவர்களுடன் உல்லாசமாக இருந்த பிறகு ஏமாற்றிவிட்டார் என்று கூறுவது ஏமாளித்தனம் என நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் துணிவுள்ள உங்களுக்கு ஏமாற்றத்தையும் சந்திக்கும் துணிவு வேண்டும் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். எனினும் அவரது இந்த புகாரால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.-source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

newstm.in