83 வயதான இத்தாலி முன்னாள் பிரதமருக்கு 30 வயது பெண் எம்.பி.யுடன் புதுக்காதல்..!


83 வயதான இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனிக்கு 30 வயது பெண் எம்.பி.யுடன் புதுக்காதல் பிறந்துள்ளது.

இத்தாலி அரசியலில் பிரித்துப்பார்க்க முடியாத நபர், முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி. 83 வயதான இவர் அந்த நாட்டின் பெரும் கோடீசுவரர். காதல் மன்னரும்கூட.

இவர் கேர்லா டால் ஓக்லியோ என்ற பெண்ணை 1965-ல் மணந்து, 1985-ல் விவாகரத்து செய்துவிட்டார்.

பின் 1990-ல் வெரோனிகா லாரியோ என்ற பெண்ணை திருமணம் செய்தார். முந்தையை மனைவியைப் போலவே இந்த மனைவியையும் 20 ஆண்டுகளில் (2010-ல்) விவாகரத்து செய்தார்.

அதையடுத்து பிரான்சிஸ்கா பாஸ்கல் என்ற 34 வயது பெண்ணைக் காதலித்தார். இந்தக் காதல் 12 ஆண்டு காலம் தொடர்ந்தது. இப்போது கசந்து விட்டது போலிருக்கிறது. இவரையும் பெர்லுஸ்கோனி பிரிந்துவிட்டார்.

இப்போது அவர் தனது கட்சியின் எம்.பி.யும், தன்னை விட 53 வயது இளையவருமான மார்த்தா ஆன்டனியோ பாஸ்சினாவை காதலிக்கிறார். இவருடனான காதலுக்காகத்தான், பிரான்சிஸ்காவை விட்டுவிட்டார் என்று இத்தாலியில் கிசுகிசுக்கப்படுகிறது.

பிரான்சிஸ்கா பாஸ்கல் ஒரு பத்திரிகை பேட்டியில், ‘‘என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பெர்லுஸ்கோனியை தினமும் கேட்டு வந்தேன், அவர் இந்த உலகிலேயே அதிக சந்தோ‌‌ஷமாக இருக்க வேண்டும். என்னைப் போலவே அவரை கவனிக்கிற ஒருவரை கண்டுபிடிப்பார் என நம்புகிறேன்’’ என கூறி இருந்தார்.

அது உண்மையாகி இருக்கிறது. இப்போது பெர்லுஸ்கோனி, புதிய காதலி பாஸ்சினாவுடன் காதல் வானில் பறக்கிறார்.

பெர்லுஸ்கோனிக்கு 5 குழந்தைகளும், 10 பேரக்குழந்தைகளும் இருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!