பிரபல நடிகர் தர்ஷனுக்கு ஏற்பட்ட விபரீத முடிவு..!


மைசூருவுக்கு வந்துள்ள நடிகர் தர்ஷனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் மைசூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரபல கன்னட திரைப்பட நடிகர் தர்ஷன். இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நடித்த ‘ராபர்ட்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. குதிரை சவாரி மீது அதிக ஆர்வம் கொண்ட நடிகர் தர்ஷன், புதிதாக குதிரைகள் வாங்குவதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு மைசூருவுக்கு வந்தார். அங்கு அவர் பிரபல தனியார் ஓட்டலில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை 4 மணியளவில் திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. வாயு பிரச்சினை மற்றும் வயிற்று வலி காரணமாக அவர் அவதிப்பட்டார் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் மைசூருவில் உள்ள கொலம்பியா ஏசியா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல்நிலை சரியாகி விட்டதாகவும், இருப்பினும் அவர் டாக்டர்களின் ஆலோசனையின்பேரில் மருத்துவமனையிலேயே ஓய்வெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் தர்ஷன் தான் நடித்துள்ள ‘பா பா பா நான் ரெடி’ என்ற திரைப்படத்தின் முதல் போஸ்டரை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

மேலும் அதில், ‘‘நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘பா பா பா நான் ரெடி’ திரைப்படத்தின் முதல் போஸ்டர் இதோ உங்கள் முன்னிலையில் இருக்கிறது. நீங்கள் அனைவரும் அதைப்பார்த்து படம் வெற்றிபெற என்னை ஆசீர்வதிக்க வேண்டும்’’ என்று பதிவிட்டு இருந்தார்.

இதற்கிடையே நடிகர் தர்ஷன் கடந்த 2 நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், நேற்று அதிகாலையில் வலி அதிகமானதால் அவர் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்றதாகவும் கொலம்பியா ஏசியா டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் நேற்று இரவு நடிகர் தர்ஷன் மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்பினார்.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!