ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த கதை அந்த நடிகருக்கு எழுதிய கதையா?


சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ கதை முதலில் வேற நடிகருக்கு எழுதிய கதை என்று தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தை வைத்து வரிசையாக படம் இயக்கி வந்த சிறுத்தை சிவா ரஜினியின் 168ஆவது படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கு அண்ணாத்த என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியிலும், சுற்றுப்புறப் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

அங்கு படப்பிடிப்பு முடிந்த உடன், அடுத்தக்கட்டமாக கொல்கத்தா செல்ல உள்ளனர். மார்ச் மாதம் கொல்கத்தா, புனேவில் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ‘அண்ணாத்த’ படம் குறித்து இணையத்தில் புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.

‘விவேகம்’ படத்துக்குப் பிறகு ‘அண்ணாத்த’ படத்தின் கதையும், ‘விஸ்வாசம்’ படத்தின் கதையும் முதலில் அஜித்துக்குச் சொல்லப்பட்டது. ஆனால், அஜித் ‘விஸ்வாசம்’ படத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டார் என்று அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!