எந்த ராசிக்காரருக்கு கடல் கடந்து செல்லும் யோகம் யாருக்கு..?


ஜாதகத்தில் பதினோராம் இடம் பலம் பெற்றிருந்தால், அந்த நபருக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, அவர் தன் வாழ்க்கையில் வெற்றியை வரவழைத்துக் கொள்ளும் யோகமும் வாய்க்கும்.

இப்பொழுது பலரும் வெளிநாட்டிற்குச் சென்று வேலை பார்ப்பதையே விரும்புகிறார்கள். காரணம் வெளிநாடு சென்றால் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. அந்த வாய்ப்பு ஒரு சிலருக்கு மட்டும்தான் கிடைக்கும். லட்சம் லட்சமாகப் பணம் சம்பாதித்தவர்களும் உண்டு. வட்டியே கட்டிக் கொண்டிருப்பவரும் உண்டு. ஜாதகத்தில் பதினோராம் இடம் பலம் பெற்றிருந்தால், அந்த நபருக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, அவர் தன் வாழ்க்கையில் வெற்றியை வரவழைத்துக் கொள்ளும் யோகமும் வாய்க்கும்.

கடல் கடக்கும் யோகம் ஒருவருக்கு அமைந்திருக்க வேண்டுமானால், அவர் ஜல ராசியில் பிறந்திருக்க வேண்டும். லக்னம் மீனமாகி லக்னாதிபதி தன் வீட்டைப் பார்க்கும் அமைப்போடு, பயண ஸ்தானாதிபதி சனி பலம்பெற்று பாக்யாதிபதி சந்திரனோடு கூடியிருக்க வேண்டும். அப்படிக் கட்டம் அமைந்தால் வெளிநாட்டு யோகம் கட்டாயம் உண்டு. இதுபோன்ற ஜாதக அமைப்பு ஒருவருக்கு அமைந்திருந்தால் வெளிநாட்டிலேயே வேலை கிடைத்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கி நிகரின்றி சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெற்றவராக விளங்குவர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!