கார் பற்றி எரிந்தது.. தந்தை – 3 வயது மகள் உடல் கருகி பலியான பரிதாபம்!!


மலேசியாவில் பினாங்கு மாநிலத்தில் கார் மோதி தீப்பிடித்து எரிந்ததில் தந்தை, 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர். பினாங்கு பெர்தாமிற்கு அருகே நெடுஞ்சாலையில் இளம் தம்பதியரும் அவர்களது குழந்தையும் காரில் பயணம் செய்தனர். அவர்கள் சென்ற கார் சாலையோரம் இருந்த தடுப்பு சுவர் மீது மோதி விபத்தில் சிக்கியது. உடனே கார் தீப்பிடித்து எரிந்ததில், காரை ஓட்டிய 23 வயதான யூப் பூன் குவாங் மற்றும் அவரது 3 வயது மகள் தீயில் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து நிகழ்ந்தப்போது அவரது மனைவி சான் சீன் யீ(29) காரில் இருந்து வெளியே தூக்கிவிசப்பட்டார். இதனால் காயத்துடன் உயிர் தப்பினார். அவரும் காரில் சிக்கியிருந்தால் உயிரிழந்திருக்க நேரிடும். இந்த விபத்தை கண்ட அங்கிருந்த வாகன ஓட்டுநர்கள் உடனடியாக தீயை அணைத்து காரில் சிக்கியவர்களை மீட்க போராடினர்.

எனினும் வேகமாக தீ எரிந்ததால் அவர்களை மீட்க முடியவில்லை எனவும் தீயணைப்பு வாகனம் வந்தபின்பே தீயை கட்டுப்படுத்த முயன்றதாகவும் அப்பகுதியினர் அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். எனினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் சீன் யீ, தனது கணவர், மகள் இறந்த அதிர்ச்சியில் இருப்பதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.-Source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!