சாண்டிக்கு இவ்வளவு தைரியம் இருக்க கூடாது.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!


பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் நடன இயக்குனர் சாண்டி. அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 105 நாட்களை வெற்றிகரமாக கடந்து இறுதிக்கட்டம் வரைசென்று இரண்டாவது இடத்தை வென்றார்.

சாண்டி பிக்பாஸ் வீட்டில் மட்டுமின்றி வெளியேயும் எப்பொழுதுமே ஏதேனும் நகைச்சுவைகளை கூறிக்கொண்டு கலகலப்பாக இருக்கக்கூடியவர். அவர் இருக்குமிடத்தில் எப்போதும் சிரிப்பு சத்தம் ஒலித்துக்கொண்டிருக்கும்.


மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை அனைவரும் விரும்பி பார்க்க அவரும் ஒரு காரணமாக இருந்தார் என கூறலாம். சாண்டிக்கு பெரியவர்கள் மட்டுமின்றி ஏராளமான சிறுவர்களும் ரசிகர்களாக உள்ளனர்.

இந்நிலையில் தற்போது சாண்டி புலியுடன் படுத்திருப்பது போன்று புகைப்படத்தை வெளியிட்டு அதில் தம்பிக்கு உடம்பு சரியில்ல அதனால் தான் அவன் கூடவே தூங்க சொல்லி அடம் பிடிக்கிறான் என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இருந்தாலும் சாண்டிக்கு இவ்வளவு தைரியம் இருக்க கூடாது என கமெண்ட் செய்து வருகின்றனர்.-Source: spark

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!