பிரபல கதாநாயகன் கார் டிரைவராக மாறி போன பரிதாபம்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!


நடிகர்கள் வாழ்க்கை எப்போதும் வெற்றிப்படியாகவே இருக்கும் என்று கூற முடியாது. பல சறுக்கல்களும் வந்துவந்து தான் போகும்.

அப்படி 25 வருடத்திற்கு முன் கன்னட சினிமாவில் அறிமுகமாகி வெற்றி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் ஷங்கர் அஸ்வத். பல வெற்றி படங்கள் உள்பட ஷங்கர் 61 படங்கள் நடித்து உள்ளார். சினிமாதுறையில் 25 ஆண்டுகள் இருந்து உள்ளார்.

இவர் தற்போது வாடகை விடும் உபேர் கார் நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார். தன்னுடைய காரில் வருவோருக்கு அடையாள தெரியகூடாது வகையில் தன் முகத்தை மூடிக் கொண்டு வேலை செய்கிறார். இந்த தகவல் தெரிந்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியாகிவிட்டனர்.

இது குறித்து ஷங்கர் அஸ்வத் கூறியதாவது:-


படங்களில் ஒரு வாய்ப்புக்காக நான் பிச்சை கேட்க நான் விரும்பவில்லை. எனக்கு சுய மரியாதை மிகவும் முக்கியம். வார நாட்களில், நான் ஒரு உபேர் காரை ஓட்டி வருகிறேன் ஒரு நல்ல வருமானம் கிடைக்கிறது. நான் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறேன்.

கடந்த ஏழு முதல் எட்டு மாதங்களில், சீரியல்களிலும் சில திரைப்படங்களிலும் எனக்கு சில நடிப்பு வாய்ப்புகள் கிடைத்தன. நான் சுதந்திரமாக இருக்கவே நான் ஒரு உபேர் டிரைவர் ஆக வேலை செய்கிறேன். நான் இப்போது ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்கிறேன். புதிய வேலை எனக்கு அதை கொடுக்கிறது. நான் முழுமையாக அனுபவித்து வருகிறேன். என கூறினார்.

ஷங்கர் அஸ்வத் பிரபல பழம் பெரும் நடிகர் கராகநாஹள்ளி சுபராயா அஸ்வத்தாநாராயண என அழைக்கப்படும் கே.எஸ். அஸ்வத்தின் மகன் ஆவார். கே.எஸ். அஸ்வத் 370 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!