பேஸ்புக் நட்பால் நேர்ந்த கொடூரம்! தூக்க மாத்திரையைக் கொடுத்து பெண் பலாத்காரம்!


கர்நாடகாவில் உள்ள பிதார் நகரைச் சேர்ந்த சஞ்சீவ ரெட்டி (48), அவரது குடும்பத்தினருடன் நிஜாம்பேட்டில் வசித்து வருகிறார். இவருக்கு பேஸ்புக்கில் அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. இதனையடுத்து சஞ்சீவ ரெட்டியின் அழைப்பின் பேரில், அமெரிக்காவில் இருந்து அந்தப் பெண் ஹைதராபாத் வந்தார்.

அவரை விமான நிலையத்தில் வரவேற்ற ரெட்டி பின்னர் தனது சகோதரியின் இல்லத்தில் தங்க வைத்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, ரெட்டி அவரை மதிய உணவுக்கு அழைத்து தனது மனைவி மற்றும் மருமகனை அறிமுகப்படுத்தினார்.

பின்னர் அப்பெண்ணிற்கு வழங்கப்பட்ட குளிர்பானத்தில் தூக்க மாத்திரைகள் கலந்து வழங்கினார். இதனால் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் மயங்கியதும் மூவரும் அவரை தூக்கிக் கொண்டு நிஜாம்பேட்டிலுள்ள தங்கள் இல்லத்திற்கு கொண்டுச் சென்றனர். அங்கு வைத்து அப்பெண்ணை ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். அதனை வீடியோவாகவும் பதிவு செய்தார்.

பிறகு அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக அவரை அச்சுறுத்தி, அப்பெண்ணிடம் ரெட்டி 30 பவுன் தங்கம், 6,000 அமெரிக்க டாலர், காசோலை புத்தகங்கள் மற்றும் ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தார்.அவரது துன்புறுத்தலால் சோர்ந்து போன அந்தப் பெண் காவல் துறையினரை அணுகியதால்,சஞ்சீவ ரெட்டி, அவரது மனைவி காவேரி மற்றும் மருமகன் விஷால் ரெட்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.-Source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!