சுரங்கம் முன்பு வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் ‘செல்பி’ எடுத்த விஜய்


நெய்வேலி என்.எல்.சி. 2-வது சுரங்கம் முன்பு வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் விஜய் ‘செல்பி’ எடுத்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு கடந்த 5-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் என்.எல்.சி. சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து கடந்த 7-ந் தேதி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது பற்றி அறிந்ததும் என்.எல்.சி. சுரங்கம் முன்பு திரண்ட விஜய் ரசிகர்கள், பா.ஜனதாவினரை கண்டித்தும், மாஸ்டர் படப்பிடிப்பை தொடர்ந்து இங்கேயே நடத்தக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். நேற்று முன்தினம் மாலையிலும் நடிகர் விஜய்யை காண்பதற்காக ரசிகர்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் 2-வது சுரங்கத்தின் முன்பு திரண்டனர். படப்பிடிப்பு முடிவடைந்து விஜய் வெளியே வருவதை அறிந்த அவர்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தை மீறி சுரங்கத்தின் நுழைவு வாயிலை நோக்கி ஓடினர். அப்போதும் போலீசார் ரசிகர்களை விரட்டியடித்து கூட்டத்தை கலைத்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!